பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தியானம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
மத்தேயு 25:10
இது பரலோக ராஜ்யத்தை குறித்து உவமையாக சொல்லப்பட்டது. மணவாளனாகிய கிறிஸ்துவின் வருகையில் நடக்கும் நிகழ்வு. இங்கும் கதவு அடைக்கப்படுகிறது. இந்த கதவு அடைக்கப்படும் முன்பு நாம் அதற்குள் பிரவேசிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1. ஆயத்தமாயிருக்க வேண்டும் (மத்தேயு 25:10)
தீவட்டியோடு எண்ணெயையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீதி. 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நமக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் ஆவியை அவித்துப் போடக்கூடாது. (1தெச.5:19). நாம் துக்கப்படும்போது, ஆவி முறிந்து போகும். (நீதி.15:13) நம்முடைய ஆவி காக்கப்பட எண்ணெய் ஆகிய அபிஷேகம் தேவை. (சங்கீதம் 92:10) புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன். என சங்கீதக்காரன் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு நம்முடைய ஆவியை காத்து, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்போம்.
2. கர்த்தரின் சித்தத்தை செய்ய வேண்டும்
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான்.
பிதாவின் சித்தத்தை அறிந்து அதை செய்ய வேண்டும். பிதாவின் சித்தம் 1தீமோ.2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட, சத்தியத்தை சொல்லி கர்த்தரின் சித்தத்தை செய்து பரலோகத்தில் பிரவேசிப்போம்.
3. உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியராக இருக்க வேண்டும் (மத்தேயு 25:21) உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, …. உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி.
கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளை கொடுத்திருக்கிறார். அதை நாம் உபயோகப்படுத்த வேண்டும். அப்போது எஜமானுடைய சந்தோஷமாகிய பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்.
ஆம், அன்பானவர்களே! கதவு அடைக்கப்படுமுன், பரலோகத்தில் பிரவேசிக்க, ஆயத்தமாவோம், கர்த்தரின் சித்தத்தை செய்வோம், தாலந்துகளை உபயோகிப்போம். ஆமென்.