கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 6

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. சமாதானமாயிருக்கிறவர்கள், யாக்கோபு 3:18 நீதியின் கனி சமாதானம் என்ற விதையை விதைப்பதின் பலனே நீதியின் கனி. நாம் சமாதானமாக இருக்கிறோமா? 1. நாம் சமாதானமாக இருத்தல் வேண்டும் யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். தன்னுடைய சீஷர்களை பார்த்து கர்த்தர் Read more

By Holy Way, ago

கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 5

இன்றைய தியானம் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். லூக்கா 3:9 கனிகளை கொடுத்தல் மத்தேயு 7:19-ல் இயேசு கிறிஸ்துவும், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்று கூறினார். நல்ல கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். நாம் கனிகளை கொடுக்கும்படி, கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான்15:16) மட்டுமல்ல, நம்மை கனிகளை கொடுக்கும் செடியாக வைத்திருக்கிறார். எரேமியா 2:21. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; Read more

By Holy Way, ago

மார்ச் மாத வாக்குத்தத்தம் – 2020

குறைவற்ற வாழ்வு – ஒன்றும் குறைவாயிருந்ததில்லை பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். லூக்கா 22:35 கர்த்தர் தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பின போது மாற்கு 6:8&9 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; கட்டளையிட்டார். பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 4

இன்றைய தியானம் கனிகளைக் கொடுத்தல். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3:8 வனாந்தரத்திலே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று பிரசங்கம் பண்ணின யோவான் ஸ்நானன், தன்னிடத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து, சொன்ன வார்த்தைதான் மேற்கண்ட வசனம். மனந்திரும்புதல் என்பது கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை. நாம் கனிகளைக் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னிடத்தில் வந்த ஜனங்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற நல்ல கனிகளைக் கொடுக்க நாங்கள் என்ன Read more

By Holy Way, ago

ஏற்றுக் கொள்ளுதல்

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் லூக்கா 9:48 இன்றைய தியானம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்,தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாக்குவாதம் பண்ணினபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தமதருகே நிறுத்தி, தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னது. இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி, பொறாமை, யார் பெரியவன்? என்ற Read more

By Holy Way, ago

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தியானம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மத்தேயு 25:10 ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. இது பரலோக ராஜ்யத்தை குறித்து உவமையாக சொல்லப்பட்டது. மணவாளனாகிய கிறிஸ்துவின் வருகையில் நடக்கும் நிகழ்வு. இங்கும் கதவு அடைக்கப்படுகிறது. இந்த கதவு அடைக்கப்படும் முன்பு நாம் அதற்குள் பிரவேசிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 1. ஆயத்தமாயிருக்க வேண்டும் (மத்தேயு 25:10) தீவட்டியோடு எண்ணெயையும் எடுத்துச் Read more

By Holy Way, ago