மனந்திரும்புதல்

லெந்துக் கால தியானம் நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19 மனந்திரும்புதல்… இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக? ஏசாயா 1:18-ல் வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என வாசிக்கிறோம். கர்த்தரோடு நாம் வழக்காட முடியுமா? 1.சர்வ வல்லவரோடு வழக்காட கூடாதென ஒப்புக் கொள்வோம் யோபு 40:2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? என்று யோபுவிடம் Read more…

ஏற்றுக் கொள்ளுதல்

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் லூக்கா 9:48 இன்றைய தியானம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்,தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாக்குவாதம் பண்ணினபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தமதருகே நிறுத்தி, தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னது. இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி, பொறாமை, யார் பெரியவன்? என்ற Read more…

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தியானம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மத்தேயு 25:10 ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. இது பரலோக ராஜ்யத்தை குறித்து உவமையாக சொல்லப்பட்டது. மணவாளனாகிய கிறிஸ்துவின் வருகையில் நடக்கும் நிகழ்வு. இங்கும் கதவு அடைக்கப்படுகிறது. இந்த கதவு அடைக்கப்படும் முன்பு நாம் அதற்குள் பிரவேசிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 1. ஆயத்தமாயிருக்க வேண்டும் (மத்தேயு 25:10) தீவட்டியோடு எண்ணெயையும் எடுத்துச் Read more…

வாசல் எதற்காக அடைக்கப்பட்டது?

யோசுவா 2:7 தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. இன்றைய தியானம் (நேற்றைய தொடர்ச்சி) இந்த நாளில் வாசல் எதற்காக அடைக்கப்பட்டது? என்பதை தியானிப்போம். ராகாப் கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரின் வேவுகாரரை பாதுகாக்க வாசலை அடைத்தாள். அதோட 3 முக்கிய காரியங்களை செய்தாள். அதை தியானிப்போம் 1. கர்த்தருடைய ஜனங்களின் நிமித்தம் கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (யோசுவா 2:9-11) கர்த்தருடைய ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர், சிவந்த சமுத்திரத்தைக் கடக்க செய்ததையும், Read more…

வாசலை அடைத்தது யார்?

இன்றைய தியானம் 19/2/2020 Bishop. S. Crosswin யோசுவா 2:7 …தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. வாசல் ஏன் அடைக்கப்பட்டது? என்பதை நாளை தியானிப்போம். வாசலை அடைத்தது யார்? என்பதே இந்த நாளின் தியானம். ராகாப் என்னும் பேர்கொண்ட வேசி (யோசுவா 2:1) மனிதர்களுக்கு வேசி என்று சொன்னதும் தவறான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. ஆனால், கர்த்தர் யாரைக் கொண்டு வேண்டுமானாலும் தமது காரியத்தை நிறைவேற்றுவார். கழுதையைக் கொண்டு பிலேயாமோடே Read more…

கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

இந்த நாள் நற்செய்தி Bishop. S. Crosswin. ஆதியாகமம் 7:16 அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார். பேழையை செய்த நோவாவுக்கு கதவை அடைக்க தெரியாதா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், கர்த்தர் கதவை அடைத்தார் என வேதம் கூறுகிறது. ஏனெனில் கர்த்தர் அடைத்தால், ஒருவரும் திறக்க முடியாது. (வெளி.3:7) கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்? கர்த்தரின் கோபத்தினால் வரும் தண்டனையிலிருந்து தப்புவிக்க. மனிதனின் பாவத்தினால், கர்த்தர் முழு Read more…

நாம் எப்படி இருக்க வேண்டும்…

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தில் பரிசுத்த வழி ஊழியத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் நம்முடைய வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிய மூன்று காரியங்களை சற்று தியானிப்போம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். மத்தேயு 5:13 உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் ருசியாக இருக்காது. வேதாகமத்தில் யோபு 6:6-ல் ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிட கூடுமோ? என்று வாசிக்கிறோம். உப்பு Read more…