கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 6

Published by Holy Way on

James 3:19


நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
சமாதானமாயிருக்கிறவர்கள்,

யாக்கோபு 3:18
நீதியின் கனி

சமாதானம் என்ற விதையை விதைப்பதின் பலனே நீதியின் கனி. நாம் சமாதானமாக இருக்கிறோமா?


1. நாம் சமாதானமாக இருத்தல் வேண்டும்

யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
தன்னுடைய சீஷர்களை பார்த்து கர்த்தர் சொன்னது: யோவான் 16:32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். இச்சூழலில் தான் கிறிஸ்து, என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு, மேற்சொன்ன காரியங்களை சொன்னேன் என்றார். நீங்கள் என்னை தனியே விட்டு விடுவீர்கள். ஆனாலும் நான் தனியே இரேன். பிதா என்னோடு இருக்கிறார். தனியாக விடப்பட்ட நிலையில் சமாதானமாக இருக்க சாத்தியமா? நம்மோடு இருந்தவர்கள் நம்மை விட்டு செல்லும் நிலையில் நம் மனநிலை எப்படி இருக்கும்? சமாதானமாக இருக்குமா? அந்த நிலையில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று உணரும்போது தான் சமாதானம். (ஆதி. 28:10-15) யாக்கோபு தன் தகப்பன் தாயை விட்டு, பதான்அராமுக்கு தனி ஒருவனாக சென்றபோது, கர்த்தர் இடைபட்டார். யாக்கோபுக்கு சமாதானம் உண்டாயிற்று. (யோவான் 20:19) பயத்தினால் சீஷர்கள் சமாதானமற்ற நிலையில், கதவை மூடி கொண்டு இருக்கையில் இயேசு கிறிஸ்து சென்று, உங்களுக்கு சமாதானம் என்றார். ஆம், இந்த சமாதானத்தை பெற்றால் தான், சமாதானத்தை விதைக்க முடியும். அப்போது நீதியின் கனிகளைக் கொடுக்க முடியும்.


2. நாம் சமாதானத்தை விதைக்கிறவர்களாக இருத்தல் வேண்டும்
மத்தேயு 5:9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
நாம் சமாதானம் பண்ண வேண்டும்.1கொரி.14:33 தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கலகங்கள், நாடுகளில், தேசங்களில், உள்நாட்டு கலகங்கள், ஏன் சபைகளுக்குள்ளும் கலகங்கள். தேவஜனங்களாகிய நாம் கலகம் பண்ணுகிறவர்களாக இராமல், சமாதானம் பண்ணுகிறவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது நீதியாகிய கனிகளை கொடுக்க முடியும்.


3.தேவராஜ்யத்தை ஸ்தாபிக்கிறவர்களாக இருத்தல் வேண்டும்
ரோமர் 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
கர்த்தருடைய ஜெபத்தை நாம் சொல்லும் போது, (மத்தேயு 6:10) உம்முடைய ராஜ்யம் வருவதாக; என்று சொல்லுகிறோம். அதன்படி கர்த்தருடைய ராஜ்யம் வர வேண்டுமானால், நீதியையும், சமாதானத்தையும், பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷத்தையும், நமக்குள் பெற்று, அதை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும். (ரோமர் 12:18) கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். (எபி.12:14) யாவரோடும் சமாதானமாயிருக்கவும்,… நாடுங்கள். அதன்படியே, நமக்குள்ளிருக்கும் தேவராஜ்யத்தை நாம் வெளிப்படுத்தும் போது, நீதியின் கனிகளை கொடுப்போம்.


கர்த்தர் தாமே லெந்துக் காலங்களில், நாம் நீதியின் கனிகளைக் கொடுக்க கிருபை செய்வாராக. ஆமென்.