ஏற்றுக் கொள்ளுதல்

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான்
லூக்கா 9:48
இன்றைய தியானம்
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்,தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாக்குவாதம் பண்ணினபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தமதருகே நிறுத்தி, தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னது.
இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி, பொறாமை, யார் பெரியவன்? என்ற நிலை தான் காணப்படுகிறது. சிறுபிள்ளையை ஏற்றுக் கொள்வது என்பது சிறு பிள்ளையின் சுபாவத்தை பெற்றவர்களாக மாற வேண்டும் என்பதே.
1. விட்டுக் கொடுத்து வாழ்தல் போட்டி, பெருமை, பொறாமை இல்லாமல் வாழ வேண்டும்.
போட்டி நீயா, நானா? யார் பெரியவன்? யாருக்கு அதிகாரம்? பெருமை என் குடும்பம், என் அந்தஸ்து. பொறாமை ஒருவர் சற்று நல்ல நிலையில் வாழ்ந்தால் அதைப் பார்த்து, பொறாமை பட்டு, தவறாக பேசுவது, இன்றைய குடும்பங்களில் இதுதான் நிலை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கொலோ.3:13 ஒருவரையொருவர் தாங்கி ஆம், விட்டுக் கொடுத்து வாழ்வது தான், தாங்குதல். இயேசு கிறிஸ்து இவ்விதமாக கூறுகிறார் மத்தேயு 20:26 உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
2.தாழ்த்துதல் மத்தேயு 18:4&5 இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். பிள்ளையைப் போலத் தாழ்த்த வேண்டும். பிலிப்பியர் 2:3 … மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். மற்றவர்களை உயர்வாக எண்ணும்போது, நம்மைத் தாழ்த்த முடியும்.
அன்பானவர்களே! சிறு பிள்ளைகள் சுபாவத்தை ஏற்றுக் கொள்ளும் போது, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறோம். யோவான் 6:5-14 -ல் ஒரு சிறுவன் தனக்குரியதை விட்டுக் கொடுத்தான், ஒரு கூட்டம் கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தினால் திருப்தி யானது. 2இராஜா.1-14-ல் பகைவரையும் நேசித்த ஒரு சிறு பெண் மூலம் சீரிய தளபதி சுகம் பெற்றான். விட்டுக் கொடுப்போம்; தாழ்த்துவோம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிப்போம். ஆமென்.