வாசல் எதற்காக அடைக்கப்பட்டது?

யோசுவா 2:7
தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.
இன்றைய தியானம் (நேற்றைய தொடர்ச்சி)
இந்த நாளில்
வாசல் எதற்காக அடைக்கப்பட்டது? என்பதை தியானிப்போம். ராகாப் கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரின் வேவுகாரரை பாதுகாக்க வாசலை அடைத்தாள். அதோட 3 முக்கிய காரியங்களை செய்தாள். அதை தியானிப்போம்
1. கர்த்தருடைய ஜனங்களின் நிமித்தம் கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (யோசுவா 2:9-11)
கர்த்தருடைய ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர், சிவந்த சமுத்திரத்தைக் கடக்க செய்ததையும், எமோரியரின் ராஜாக்களுக்கு செய்யப்பட்டதையும் கேள்விப்பட்டதினால், வேவுகாரரிடம் கர்த்தரை மகிமைப்படுத்தினாள். யாத்திரா15-ல் இஸ்ரவேலர் கர்த்தரை மகிமைப்படுத்தினர்; தானி.4:34 நேபுகாத்நேச்சார் தேவனை மகிமைப்படுத்தினான். லூக்கா 17:15-17 சமாரியனாகிய குஷ்டரோகி இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தினான். வேசியாகிய ராகாப் கர்த்தரை மகிமைப்படுத்தினாள். நாமும் கர்த்தரை மகிமைப்படுத்த அழைக்கப்படுகின்றோம்.
2. தயவு செய்யும்படி ஆணையிடுவித்துக் கொண்டாள் (யோசுவா 2:12&13)
வேவுகாரரிடம் நான் உங்களுக்கு தயவு செய்தேன்; நீங்களும் எனக்கும் என் குடும்பத்திற்கும் தயவு செய்ய வேண்டும் என்று ஆணை பெற்றுக் கொண்டாள். கர்த்தரின் ஜனங்களோடே உடன்படிக்கை செய்து கொண்டாள். நாமும் கர்த்தரோடு உடன்படிக்கை செய்ய அழைக்கப்படுகின்றோம். (எபிரெ.8:8)
3. ஆலோசனைக் கூறினாள் (யோசுவா 2:16&22)
வேவுகாரரிடம் நீங்கள் மலையிலே போய் ஒளிந்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்று கூறினாள். ஆலோசனை கூறுவது யார் என்பதை காட்டிலும், கொடுக்கப்படும் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதியான் தேசத்து ஆசாரியனாகிய எத்திரோ, மோசேக்கு ஆலோசனை கொடுத்தான். (யாத்தி.18:19-24)
ராகாப் வாசலை அடைத்து, கர்த்தரை மகிமைப்படுத்தி, வேவுகாரருக்கு தயவு செய்து, அவர்களிடம் தயவையும் பெற்று, அவர்களுக்கு ஆலோசனை கூறி, தன்னையும், தன் குடும்பத்தையும் பெரிய அழிவிலிருந்து காத்துக் கொண்டாள்.
நாமும் அவ்விதமே கர்த்தரை மகிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு தயவு செய்து, கர்த்தரிடம் தயவை பெற்று, கர்த்தரிடம் ஆலோசனை பெற்று, அழிவிற்கு தப்பித்துக் கொள்வோம். ஆமென்.