கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

Published by Holy Way on

இந்த நாள் நற்செய்தி Bishop. S. Crosswin.


ஆதியாகமம் 7:16 அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார்.
பேழையை செய்த நோவாவுக்கு கதவை அடைக்க தெரியாதா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், கர்த்தர் கதவை அடைத்தார் என வேதம் கூறுகிறது. ஏனெனில் கர்த்தர் அடைத்தால், ஒருவரும் திறக்க முடியாது. (வெளி.3:7)


கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

  1. கர்த்தரின் கோபத்தினால் வரும் தண்டனையிலிருந்து தப்புவிக்க.
    மனிதனின் பாவத்தினால், கர்த்தர் முழு உலகத்தையும் அழிக்க வானத்தின் மதகு களையும், ஆழத்தின் ஊற்றுகளையும் திறந்தார். மனுஷர் முதற்கொண்டு மிருகஜீவன்கள் அனைத்தும் அழிந்து போயின. அந்த அழிவிலிருந்து காக்க கர்த்தர் யாரும் திறக்க முடியாத படி கதவை அடைத்தார். இன்றும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை, அழிவிலிருந்து காக்கும்படி கதவை அடைத்து பாதுகாக்கிறார். (ஆதி.6:8&7:1) நாம் நீதிமானாக மாறும் போது கர்த்தர் கிருபையினால் நம்மை பாதுகாக்கிறார்.

2. நோவா வோடு இருந்த ஒன்றும் வெளியே தவறி சென்று விடாதபடி கதவை அடைத்தார்.
நானும்,நீங்களும் நம்மோடு கூட இருக்கின்ற அனைத்தையும் கர்த்தர் தவறி போகாத படி கதவை அடைத்து பாதுகாக்கிறார். (எஸ்றா 8:21) உபவாசம் & ஜெபம் செய்து கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்.

3. புதிய வாழ்க்கைக்கு கொண்டு செல்ல கதவை அடைத்து பாதுகாக்கிறார்.
நாம் பழைய அழிவின் வாழ்வில் மீண்டும் விழுந்து விடாமல், புதிய வாழ்வைப் பெற்று அனுபவிக்க கர்த்தர் கதவை அடைத்து பாதுகாக்கிறார். (ஏசாயா 43:18&19) பழைய வாழ்க்கையையும், முந்தின காரியங்களையும் நினைக்காமல் வாழும் போது, கர்த்தர் நம்மை பாதுகாத்து, புதிய ஆசீர்வாத வாழ்வுக்கு கொண்டு செல்வார். ஆமென்.